தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணையில் பொறியாளர் குழுவினர் ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் பொறியாளர் குழுவினர் ஆய்வு

webteam

முல்லைப்பெரியாறு அணையின் கரைகளில் மண் அரிப்பை தடுக்க நடந்துவரும் கற்கள் பதிக்கும் பணியை தமிழக பொதுப்பணித்துறை
பொறியாளர்கள் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். 

முல்லைப்பெரியாறு அணையில் கடந்த மாதம் முதல் அணையில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகளை தமிழக பொதுப் பணித்துறையின் முல்லைப்பெரியாறு அணை உதவி கோட்ட பொறியாளர் சாம் இர்வின் தலைமையில், தமிழக பொதுப்பணித்துறையின் திட்டப்பிரிவு உதவி கோட்ட பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். திட்டப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, இனி தேவைப்படும் நிதி குறித்து அவர்கள் ஆய்வு செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.