தமிழ்நாடு

சிறார்களின் ஆபாச வீடியோ : கோவையில் மேலும் ஒருவர் கைது

jagadeesh

சிறார்களின் ஆபாச வீடியோ பதிவிட்டதாக ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோவையில் மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி பொத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த சத்யமூர்த்தி (25). இவர் தனது ஃபேஸ்புக்கில் சிறார்களின் ஆபாச வீடியோ பதிவிட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து சமூக ஊடகப் பிரிவிலிருந்து புகார் அளிக்கப்பட்டதன் பேரில் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யமூர்த்தியை கைது செய்தனர்.

 கைது செய்யப்பட்டுள்ள சத்யமூர்த்தி, தனியார் கல்லூரியில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது, சகோதரர் தேனி மாவட்டத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இதே புகாரில் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் டைல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த ரெண்டா பாசுமடாரி என்பவரை பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர்களின் சமூக வலைத்தள கணக்கை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் முடக்கியுள்ளனர். தொடர்ந்து சிறார்கள் ஆபாச வீடியோ பதிவிடுபவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் கோவை எஸ்.பி.சுஜித்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.