தமிழ்நாடு

அறிவியல் வளர்ந்து விட்டது; இப்போதும் தண்டோராவா?: தலைமைச் செயலாளர் முக்கிய கடிதம்

webteam

அறிவியல் வளர்ந்து விட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் தண்டோரா போடுவது இன்னும் தொடர வேண்டியது தேவையில்லை என தலைமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, “மக்களிடம் முக்கிய செய்திகளை விரைவாக சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும், அதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன்.

அறிவியல் வளர்ந்து விட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் தண்டோரா போடுவது இன்னும் தொடர வேண்டியது தேவையில்லை. ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் வர செய்வதன் மூலம் மூலைமுடுக்கெல்லாம் தகவல்களை கொண்டு சேர்த்திட இயலும்.

எனவே தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவ பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.