தமிழ்நாடு

’தி கலாமிடஸ் கேஸ்’ - 9 வயது சிறுவன் எழுதிய நூலை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

Sinekadhara

ஒன்பது வயது மாணவன் எழுதிய அறிவியல் புனை கதைகள் தொடர்பான நூலை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

ஹிதியாசன் ராகவ் என்ற சிறுவன் தி கலாமிடஸ் கேஸ் என்ற நூலை எழுதியுள்ளார். 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு உலகம் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் விதமாக இந்நூலை எழுதியுள்ளார். இதுவரை இச்சிறுவன் 4 புத்தகங்களை எழுதியுள்ளார்.