தூத்துக்குடியில் டிச.21ல் முதல்வர் ஆய்வு புதிய தலைமுறை
தமிழ்நாடு

தூத்துக்குடியில் வெள்ளபாதிப்புகளை ஆய்வுசெய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜெனிட்டா ரோஸ்லின்

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்ய மதுரை சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அதனை தொடர்ந்து தூத்துக்குடி சென்று ஆய்வு மேற்கொள்கிறார்.

அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ததோடு அப்பகுதியில் வசிக்கும் நிலை குறித்தும் அவர்களின் தேவைகள் என்னவென்பது குறித்தும் கேட்டறிந்தார் முதல்வர். தொடர்ந்து அங்கிருந்த மக்களுக்கு முதல்வர் நிவாரண உதவிகளையும் வழங்கினார். அவருடன் கனிமொழி எம்.பி, கே.என்.நேரு மற்றும் சில அதிகாரிகள் இருந்தனர்.