தமிழ்நாடு

தமிழர் பெருமையை பறைசாற்றும் கீழடி அருங்காட்சியகம் - அடிக்கல் நாட்டிய முதல்வர்

webteam

கீழடியில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கீழடியில் அகழாய்வு பணிகளில் கிடைத்த பொருட்களை வைத்து தமிழரின் பெருமையை பறைசாற்றும் வகையில் ரூ.12.21 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 2 ஏக்கர் அளவு பரப்பளவில் ஒரு வருடத்தில் இந்த அருங்காட்சியகத்தை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அடிக்கல்லை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் நாட்டினார்.