accident pt desk
தமிழ்நாடு

சென்னை: அரசுப் பேருந்து மோதி விபத்து - தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண் உயிரிழப்பு

webteam

செய்தியாளர்: சாந்தகுமார்

சென்னை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை அருகில் ரேடியல் சாலையில், இன்று அதிகாலை பாத்திமா (45) என்பவர் துய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அரசுப் பேருந்து அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

Accident

இதைக் கண்ட சக தூய்மை பணியாளர்கள் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ உதவியாளர் பாத்திமாவை பரிசோதித்து பார்த்துள்ளார். ஆனால் அவர், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக அவர் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.