சம்போ செந்தில் முகநூல்
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைந்த காவல் துறை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலை பிடிக்க, சென்னை காவல் துறையினர் துபாய் விரையவுள்ளனர்.

PT WEB

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலை பிடிக்க, சென்னை காவல் துறையினர் துபாய் விரையவுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஏ2-ஆக சேர்க்கப்பட்டிருப்பவர் சம்போ செந்தில். இவர் துபாயில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரை பிடிக்க, தனிப்படை காவல் துறையினர் ஓரிரு தினங்களில் துபாய் விரையவுள்ளனர். ஏற்கனவே சம்போ செந்திலுக்கு எதிராக, ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.