தமிழ்நாடு

காதலிக்க மறுத்த ஐ.டி பெண்ணுக்கு அரிவாள் வெட்டு : சென்னையில் கொடூரம்

webteam

சென்னையில் காதலிக்க மறுத்த ஐடி பெண்ணை அரிவாளால் வெட்டியவரை மக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை திருவான்மியூரில் தங்கி ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இளம்பெண் திவ்யா (22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை திருத்தணியை சேர்ந்த கெவின் (23) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அத்துடன் தன்னை காதலிக்குமாறு திவ்யாவையும் வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால், அப்பெண்ணை கெவின் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். 

திவ்யா ரத்த வெள்ளத்தில் சரிய, கெவின் தப்பியோடியுள்ளார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கெவினை பிடித்து திருவான்மியூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். திவ்யா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபொன்று அடையாறில் மாளவிகா என்ற பெண்ணை, அவரது காதலன் எனக் கூறப்படும் நபர் 15 மேற்பட்ட இடங்களில் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.