தமிழ்நாடு

பாலங்கள் பழுதுபார்க்கப்படுமா?: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

webteam

பாலங்கள் பராமரிப்பின்றி இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், வல்லுநர்களின் ஆலோசனை பெற்று பாலங்கள் பழுதுபார்க்கப்படுமா என தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சோழசிராமணியில் 3 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் அந்தரத்தில் தொங்குவதாக வாட்ஸ்அப்பில் வந்த தகவலைக் கொண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இதனை பொதுநல வழக்காக விசாரிக்க நீதிபதி கிருபாகரன் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று விசாரித்த நீதிபதி, உயர் நீதிமன்றத்துக்கு கட்டப்படும் கட்டடங்களும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற கருத்தை தெரிவித்தார். எதிர்காலத்தில் நல்ல தொழில்நுட்பம், உபகரணங்களைக் கொண்டு அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுமா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், வல்லுநர்களின் ஆலோசனை பெற்று பாலங்கள் பழுதுபார்க்கப்படுமா என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.