மழை pt web
தமிழ்நாடு

இரண்டாம் நாளாக வெளுத்துவாங்கிய மழை; குளுகுளுவென மாறிய சென்னை!

PT WEB

சென்னையில் நேற்றுமுன் தினம் நள்ளிரவில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவு சுமார் 9 மணி முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, கோயம்பேடு, தி.நகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், மயிலாப்பூர், அடையாறு, வேளச்சேரி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது. அதேபோன்று பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூர், குன்றத்தூர், அனகாபுத்தூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

மழையின் காரணமாக பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். மழையால் தாழ்வான இடங்கள், முக்கிய சாலைகளில் தேங்கி இருந்த தண்ணீரால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.