பெண் உயிரிழப்பு pt desk
தமிழ்நாடு

சென்னை: கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து - தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு

சிலிண்டரில் ஏற்பட்ட கேஸ் கசிவு காரணமாக தீப்பற்றி விபத்து, தீக்காயங்களுடன் இருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

PT WEB

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை மடிப்பாக்கம், குபேரன் நகர், 5வது தெருவில் தனியாக வசித்து வருபவர் வின்சி பிளாசிடா (25), இவர் தனியார் வங்கி ஒன்றில் மேலாளாராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி இரவு வீட்டில் சிலிண்டர் தீர்ந்து போனதால், தன்னுடன் பணிபுரியும் மண்கண்டன் (28), என்பவரிடம் சிலிண்டர் எடுத்து வருமாறு கூறியுள்ளார். அவரும் கௌரிவாக்கத்தில் இருந்து சிலிண்டரை எடுத்து வந்து மாற்றியுள்ளார்.

அப்போது கேஸ் கசிவு ஏற்பட்டு, திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. இதனை அணைக்க இருவரும் முற்பட்ட போது தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதில் பெண்ணுக்கு 60 சதவீத தீக்காயம் ஏற்பட்ட நிலையில், கே.எம்.சி.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்து தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் விசாரித்து வந்த நிலையில்,; சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து மணிகண்டன் 45 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.