தமிழ்நாடு

செப் 1 முதல் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

Rasus

சென்னை எழும்பூர் முதல் கடற்கரை வரை செல்லும் ரயில் தடத்தில் பராமரிப்பு பணிகளை ஒட்டி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை மின்சார ரயில்வே சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

காலை 11.45 முதல் மாலை 3.15 வரை சுமார் 4 மணி நேரத்திற்கு கடற்கரை முதல் தாம்பரம் இடையிலான 29 சேவை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை முதல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூர் இடையிலான 15 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்டுள்ள சேவைகளை ஈடுகட்ட 14 சிறப்பு மின்சார ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.