Accused pt desk
தமிழ்நாடு

சென்னை | மூதாட்டியை வெட்டிக் கொலை செய்து அடையாற்றில் வீசிய கொடூரம் - தம்பதியினர் கைது

webteam

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

சென்னை எம்ஜிஆர் நகர் மயிலை சிவமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி விஜயா. இவர் ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 17 ஆம் தேதி வேலைக்கு சென்றபோது, மூதாட்டி காணாமல் போகவே, அவரது மகள் லோகநாயகி எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விஜயாவை தேடி வந்தனர்.

Old women murder case

இந்நிலையில், விஜயாவின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த பார்த்திபன் என்பவரை விசாரணைக்கு வரும்படி கடந்த 23 ஆம் தேதி காவல்துறையினர் அழைத்துள்ளனர். எனினும், பார்த்திபன் தனது மனைவி சங்கீதாவோடு தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து, விருதுநகரில் பதுங்கி இருந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்து மேற்கொண்டனர்.

விசாரணையில், மூதாட்டி விஜயாவை இருவரும் சேர்ந்து நகைக்காக துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து உடலை மூட்டைக்கட்டி அடையாற்றில் வீசியது தெரியவந்துள்ளது.