roof collapsed  pt desk
தமிழ்நாடு

சென்னை: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி உயிரிழப்பு

webteam

செய்தியாளர்: ஆனந்தன்

செங்கல்பட்டை சேர்ந்தவர் செல்லம்மாள் (62). இவர் சென்னை சைதாப்பேட்டை துரைசாமி கார்டன் இரண்டாவது தெருவில் வசிக்கும் தனது சகோதரியை பார்ப்பதற்காக வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது வீட்டின் மேற்கூரை பெயர்ந்;து மூதாட்டி மீது விழுந்துள்ளது.

roof collapsed

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சைதாப்பேட்டை காவல்நிலைய போலீசார், மூதாட்டியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.