House pt desk
தமிழ்நாடு

சென்னை|பூட்டை உடைத்து 100 சவரன் நகைக் கொள்ளை - ஷாப்பிங் சென்று வீடு திரும்பியவர்களுக்கு அதிர்ச்சி!

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

சென்னை திருவேற்காடு, அயனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (44). இவர், சவுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வரும் இவருக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தனது குடுத்துடன் காரில் சென்னைக்கு ஷாப்பிங் சென்று பின்னர் இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

Police station

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 103 சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக ஜனார்த்தனன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சோதனை செய்தனர். மேலும் வீட்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில், தனி ஆளாக வந்த மர்ம நபர், கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கொள்ளையர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.