தமிழ்நாடு

சென்னையில் லாரி மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு

ஜா. ஜாக்சன் சிங்

சென்னையில் தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் சுந்தர கிராமணி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (22). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பிகாம் படித்து வந்தார். இந்நிலையில், அடையாறு போர்ட் கிளப் 1- வது அவென்யூவில் சீனிவாசன் இன்று பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று சீனிவாசன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தண்ணீர் லாரி ஓட்டுனர் லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து சீனிவாசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், தப்பி ஓடிய லாரி ஓட்டுனர் பெருங்குடியைச் சேர்ந்த இன்பராஜ் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.