தமிழ்நாடு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கையின்றி நோயாளிகள் அவதி

Sinekadhara

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதையடுத்து கொரோனா நோயாளிகள் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

மருத்துவமனையில் மொத்தமுள்ள 480 படுக்கைகளில் 325 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு ஆக்சிஜன் வசதி உள்ள 325 படுக்கைகளும் நிரம்பிவிட்டன. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள நோயாளிகள் வெளியே காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த நோயாளிகள் மருத்துவமனையின் வாயிலிலும், மரத்தடிகளிலும் படுக்க வைக்கப்பட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்துகின்றனர்.