தமிழ்நாடு

கூடலூர்: துரத்திய காட்டு யானை... நூலிழையில் உயிர்தப்பிய தம்பதி!

webteam

கூடலூர் அருகேயுள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் செம்பக்கொல்லி என்ற பழங்குடி கிராமம் உள்ளது. இங்கு காட்டு யானைகள் வராமல் தடுப்பதற்காக வெட்டப்பட்ட அகழியின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. அதன் வழியாக வந்த மதம் பிடித்த ஒற்றை காட்டு யானை, எதிரே வந்த தம்பதியை விரட்டியுள்ளது. அவர்கள் தலைதெறிக்க ஓடி உயிரைக் காப்பற்றிக் கொண்ட காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.