ரயில் சேவைகள் மாற்றம்  முகநூல்
தமிழ்நாடு

நெல்லையில் ரயில் சேவைகள் மாற்றம்

ஜெனிட்டா ரோஸ்லின்

நெல்லையில் ரயில் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியில் ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள மழை சேதம் காரணமாக அங்கிருந்து புறப்படும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டும் மாற்றம் செய்யப்பட்டும் உள்ளது.

அதன்படி நெல்லை - சென்னை இடையில் இருமார்க்கமும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், திருச்செந்தூர் - சென்னை விரைவு ரயில், தாதர் எக்ஸ்பிரஸ், மதுரை - புனலூர் ரயில் சேவை ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டும் சில ரயில்கள் பகுதி நேரமாக ரத்தும் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. முழு அறிவிப்பினை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.