தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு pt web
தமிழ்நாடு

ஆரஞ்சு அலார்ட்! தமிழ்நாட்டில் அடுத்து 5 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது; ஆனா ரெட் அலார்ட் வாபஸ்!

PT WEB

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு மழைக்கான ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. நாளை தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் காற்றுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் தமிழ்நாட்டிற்கு 20 ஆம் தேதி விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டது.