தமிழ்நாடு

மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கவேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

webteam

புயலால் உயிரிழந்த மீ‌னவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மீனவ மக்கள் தங்கள் வேதனைகளை வெளிப்படுத்த போராட்டத்தில் ஈடுபடுவதில் எந்தத் தவறும் இல்லை. மீனவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்தப் பேரழிவு நேரத்தில் மீனவர்களுக்கு எவ்வளவு உதவிகள் வேண்டுமோ அதை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.

உயிரிழந்த மீனவக் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கும் அந்த நிதி சென்று சேரவேண்டும். காயப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். அத்துடன் படகுகள் மற்றும் வலைகள் பாதிக்கப்பட்ட மீனவர்கள், வாழைத்தோட்டம், ரப்பர் தோட்டம், தெண்ணைகளை இழந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தயவு செய்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இதை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டாம்” என்று கூறினார்.