தமிழ்நாடு

தமிழ்நாட்டு அதிகாரிகள் மூவர் சிபிஐ எஸ்பி ஆக நியமனம்

webteam

தமிழ்நாட்டு பிரிவை சேர்ந்த மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் சிபிஐயில் புதிய எஸ்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 


மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சிபிஐ பல முக்கிய வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த அமைப்பு நாட்டின் முக்கிய புலனாய்வு அமைப்பாக இருந்து வருகிறது. சிபிஐயில் புதிதாக நான்கு பேர் எஸ்பி அந்தஸ்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் மூன்று பேர் தமிழ்நாட்டை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி சந்தோஷ் ஹடிமணி ஐபிஎஸ், முரளி ரம்பா ஐபிஎஸ், சோனால் சந்திரா ஐபிஎஸ் ஆகியோர் சிபிஐயில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து வித்யூத் விகாஷ் ஐஆர்எஸ் அதிகாரியும் சிபிஐயில் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.