தமிழ்நாடு

வாட்ஸ் அப்பில் வெளியான செவிலியர் தேர்வு வினாத்தாள்: ராஜஸ்தான் இளைஞர் மீது வழக்குப் பதிவு

வாட்ஸ் அப்பில் வெளியான செவிலியர் தேர்வு வினாத்தாள்: ராஜஸ்தான் இளைஞர் மீது வழக்குப் பதிவு

webteam

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் பதவிக்காக நடத்தப்பட்ட தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் ராஜஸ்தான் இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 82 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 12 ஆம் தேதி 30 மையங்களில் நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 17,969 தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.