திடீரென தீப்பிடித்து எரிந்த கார் pt desk
தமிழ்நாடு

திருப்பூர்: சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலையில் சென்றபோது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணித்த தம்பதிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

PT WEB

செய்தியாளர்: கார்வேந்த பிரபு

உடுமலைப்பேட்டை சாதிக் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வில்லியம்ஸ், தனது மனைவியுடன் தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென காரின் முன்புற இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

இதையடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு காரை செலுத்திய வில்லியம்ஸ் அங்கு காரை நிறுத்திவிட்டு தம்பதியர் இருவரும் கீழே இறங்கினர். உடனே கார் தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 2 மாதங்களுக்கு முன் வாங்கிய கார் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.