தமிழ்நாடு

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு: 'பிங்க்' வண்ண விளக்குகளால் ஜொலித்த ரிப்பன் மாளிகை

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு: 'பிங்க்' வண்ண விளக்குகளால் ஜொலித்த ரிப்பன் மாளிகை

Veeramani

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காக, சென்னை மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் மாளிகை 'பிங்க்' வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.

மார்பக புற்றுநோய் சிகிச்சை குறித்த தகவல் மையத்தை, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, திமுக எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் ரிப்பன் மாளிகையில் தொடங்கி வைத்தனர். பின்னர் பேசிய மா. சுப்பிரமணியன், இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடத்துக்கும் ஒரு பெண் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகக் கூறினார். 13 நிமிடத்துக்கு ஒருவர் இதனால் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், நாட்டிலேயே சென்னை மாநகராட்சியில்தான் அதிநவீன கருவிகள் மூலம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சிகிச்சைகள் அளிக்கப் படுவதாகக் கூறினார்.