கோவை பன்னாட்டு விமான நிலையம் கோப்புப்படம்
தமிழ்நாடு

“எந்த நேரம் வேண்டுமானாலும் குண்டு வெடிக்கலாம்” - கோவை விமான நிலையத்திற்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல்

webteam

செய்தியாளர்: சுதீஸ்

கோவை விமான நிலையத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் குண்டு வெடிக்கலாம் என விமான நிலைய இயக்குனருக்கு மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விமான நிலையத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

Bomb threat

இதனால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்களுக்கு மிரட்டல் வந்துள்ளதுபோல், கோவை விமான நிலையத்திற்கும் வந்துள்ளதாக, விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறியது குறிப்பிடத்தக்கது.