தமிழ்நாடு

நெல்லையில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம் : 5 டன் எடை, 25 அடி நீளம்

webteam

நெல்லையில் சுமார் 5 டன் எடையுள்ள திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. 

நெல்லை மாவட்டம் உவரியில் அந்தோணியார் ஆலயம் அருகில் உள்ள கடற்கரையில் இன்று பிற்பகலில் நேரத்தில் சுமார் 25 அடி
நீளம் 5 டன் எடையுள்ள திமிங்கலம் கரை ஒதுங்கியது. இந்த திமிங்கலம் இறந்து பத்து முதல் 15 நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும்,
கப்பலில் அடிபட்டோ அல்லது வேறு காரணங்களாலோ திமிங்கலம் இறந்திருக்கக்கூடும் என்று மீனவர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து
மீன் வளதுறையினர் மற்றும் கடலோர காவல்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.