தமிழ்நாடு

போகி பண்டிகை கொண்டாட்டம்: சென்னையில் வாகன ஓட்டிகள் அவதி

sharpana

தமிழகம் முழுவதும் போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் மக்கள் வீட்டிலுள்ள தேவையற்ற பொருட்களை எரித்ததால் சாலையில் புகைமூட்டமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் போகி கொண்டாட்டத்தையொட்டி பழைய பொருட்களை மக்கள் எரித்ததால் புகைமூட்டத்துடன் பனிமூட்டமும் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதனால், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. அதோடு, காற்று மாசை தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவித்துள்ளது.