தமிழ்நாடு

ஜூன் 8இல் நடைபெறவிருந்த பி.எட். தேர்வு மாற்றம்

rajakannan

ஜூன் 8ஆம் தேதி நடைபெறவிருந்த பி.எட். தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என அதற்கான தேர்வு வாரியம் அறிவித்தது. இந்நிலையில், அதே நேரத்தில் பி.எட் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டுகளுக்கான இறுதி பருவத்தேர்வு நடைபெறுகிறது. இதனால் ஆசிரியர் கல்வியியல் பட்டயப்படிப்பை முடித்து, பி.எட் பயின்று வரும் மாணவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான தாள் ஒன்றை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி தேர்வு தேதியை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், ஜூன் 8ஆம் தேதி நடைபெறவிருந்த பி.எட். தேர்வு ஜூன்13ஆம் தேதி பிற்பகல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதியை மாற்ற மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்த நிலையில் உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.