தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்..!

Rasus

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். பின்னர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு அதிகாலை கரை திரும்பும் போது, பைபர் படகில் வந்த இலங்கை மீனவர்கள் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதாக தெரிகிறது.

இதனால் தமிழக மீனவர்கள் அச்சத்துடன் கரை திரும்பினர். மேலும் இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியால் படகு ஒன்றுக்கு 40 ஆயிரம் முதல் ஒன்றரை லட்ச ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் தமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.