ஆம்ஸ்ட்ராங் படுகொலை முகநூல்
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. மேலும் ஒருவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

PT WEB

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மொத்தம் 28 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதில் 25 நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்

இவ்வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்து வரும் ரவுடி சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட 30 பேர் மீது சமீபத்தில் எழும்பூர் நீதிமன்றத்தில் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்ததாக 28 ஆவது நபராக ரவுடி புதூர் அப்புவை செம்பியம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். தற்போது புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.