தமிழ்நாடு

பள்ளி வேன் மோதி 2 வயது சிறுவன் உயிரிழப்பு

பள்ளி வேன் மோதி 2 வயது சிறுவன் உயிரிழப்பு

webteam

அரியலூர் அருகே பள்ளி வேன் மோதியதில் 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள திருகளப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது தங்கை மகள் கலைவாணி, பெரியகருக்கையில் உள்ள அன்னை தெரசா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார். வழக்கமாக பள்ளிக்கு வேனில் சென்றுவிட்டு வீடு திரும்புவார். 

இந்நிலையில் இன்று வழக்கம்போல் பள்ளிக்கு செல்ல, பள்ளி வேன் கலைவாணியை அழைக்க வீட்டின் முன்பு வந்தது. அப்போது மணிகண்டனின் 2 வயது மகன் ராகுல் வேனின் அருகே ஓடினான். இதில் வேனின் பின் பக்க சக்கரத்தில் சிக்கி ராகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்திற்கு காரணமாக வேன் ஓட்டுநரை கைது செய்ய கோரி உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.