ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டர்
தமிழ்நாடு

மறக்குமா நெஞ்சம்" இசை நிகழ்ச்சி: டிக்கெட் தொகை திரும்ப கிடைக்காத நபருக்கு ரூ.67 ஆயிரம் வழங்க உத்தரவு

PT WEB

எஸ்.சந்திரன், கரூர்

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் மணிகண்டன் என்பவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி சென்னையில் நடைபெற இருந்த ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியில் தனது குடும்பத்தினருடன் கலந்துகொள்வதற்காக ரூ.12 ஆயிரம் செலுத்தி டிக்கெட் பெற்றுள்ளார். ஆனால் அந்த இசை நிகழ்ச்சி மழை காரணமாக வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் ’ஒத்திவைக்கப்பட்ட தேதியில் தன்னால் கலந்துகொள்ள முடியாததால், டிக்கெட்டுக்காக செலுத்திய தொகையை திருப்பித் தருமாறு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏ.சி.டி.சி. நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் அவர்கள் பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளித்துவிட்டு இதுவரை தனது பணத்தைத் திருப்பி செலுத்தவில்லை’ எனவும் கூறி கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏ.சி.டி.சி. நிறுவனம் மனுதாரருக்கு டிக்கெட் தொகை ரூ.12,000, சேவை குறைபாட்டிற்கான இழப்பீடு ரூ.50,000 ஆயிரம் மற்றும் செலவுத்தொகை ரூ.5,000 என மொத்தம் 67 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: 1 ரன்னில் த்ரில் வெற்றிபெற்ற SRH.. செம்ம உற்சாகத்தில் துள்ளிக் குதித்த காவ்யா மாறன்.. #ViralVideo