தமிழ்நாடு

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து - பிரதமர் இரங்கல்...நிவாரணம் அறிவிப்பு

webteam

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து இழப்பீடு தொகையை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில், “பட்டாசு ஆலை விபத்து வருத்தம் அளிக்கிறது. படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். வழக்கம் போல் இன்று பணியில் தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த போது, திடிரென அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கு பட்டாசுகளுக்கிடையே ஏற்பட்ட உராய்வே காரணம் எனச் சொல்லப்படுகிறது.முன்னதாக ராகுல் காந்தியும் உயிரிழந்தவரகளின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.