ஜாபர் சாதிக், அமீர் pt web
தமிழ்நாடு

ஜாபர் சாதிக் வழக்கு | இயக்குநர் அமீரிடம் 11 மணி நேரம் விசாரணை; அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

PT WEB

2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த மாதம் 9ம் தேதி போதைப் பொருள் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திரைப்பட இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதன்பேரில், டெல்லியில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அமீர் நேற்று காலை ஆஜரானார். அங்கு அவரிடம் இரவு 10.30 மணி வரை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர்.

அமீரிடம் விசாரணை நடைபெற்றபோது, அவரது தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஜாபர் சாதிக்குடன் இருக்கும் தொடர்பு குறித்தும் அவரது பணப்பழக்கம் தொடர்பாகவும் அமீரிடம் விசாரணை நடைபெற்றது.

அடுத்தது என்ன?

இதனிடையே, இயக்குநர் அமீரை தற்போதைக்கு கைது செய்யும் எண்ணம் இல்லை என அதிகாரிகள் கூறினர். அவர் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.