தமிழ்நாடு

ஆம்பூரில்: வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2வயது சிறுவனுக்கு நேர்ந்த சோக முடிவு

kaleelrahman

ஆம்பூர் அருகே வீட்டில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு உமராபாத் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள தேவலாபுரம் ஊராட்சி லகன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் விமல்குமார் என்பவரின் மகன் யுவன். இந்த 2 வயது சிறுவன் வீட்டின் அருகாமையிலுள்ள குழந்தைகளோடு தனது வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது கால் தவறி கீழே விழுந்துள்ளான்.

இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு வந்து சேர்த்தனர். சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.