தமிழ்நாடு

“ஒற்றைத் தலைமை ஓபிஎஸ் ஐயா” - ஓபிஎஸ் வருகையின் போது அதிமுக தொண்டர்கள் முழக்கம்

“ஒற்றைத் தலைமை ஓபிஎஸ் ஐயா” - ஓபிஎஸ் வருகையின் போது அதிமுக தொண்டர்கள் முழக்கம்

நிவேதா ஜெகராஜா

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வரும்போது ‘ஒற்றைத் தலைமை’ என அங்கிருந்த தொண்டர்கள் முழக்கமிட்டனர். இதனால் அங்கு சில நிமிடங்களுக்கு பரபரப்பு ஏற்பட்டது,

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளின் கூட்டம் இன்று நடந்தது. தேர்தல் முடிவுக்குப் பிறகு நடைபெறும் முதலாவது மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக இது பார்க்கப்படுகிறது. இதில் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் எனக்கூறப்பட்டிருந்தது.

மேலும் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலருடன் சசிகலா தொடர்ந்து பேசி வருவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என கருதப்பட்டது. உடன் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வகுக்க வேண்டிய வியூகம் குறித்தும் பேசப்படும் என சொல்லப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஒற்றைத் தலைமை எனக்கூறி முழக்கம் எழுப்பத்தொடங்கினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.