சாலையில் கிடந்த பச்சிளங்குழந்தை பத்திரமாக மீட்பு pt desk
தமிழ்நாடு

சிவகங்கை: பிறந்த சில மணி நேரத்தில் உடலில் காயத்துடன் வீசப்பட்ட குழந்தை... யார் செய்தது இக்கொடூரத்தை?

சிங்கம்புணரியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கழுத்து, கை அறுபட்டு சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: நைனா முகம்மது

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி - சுக்காம்பட்டி சாலையில் நேற்று நள்ளிரவு ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. சத்தம்கேட்டு அந்தப் பகுதி மக்கள் பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று கழுத்து மற்றும் கையில் அறுபட்ட நிலையில் சாலையோரத்தில் கிடந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், குழந்தையை மீட்டு சிங்கம்புணரி தாலுகா தலைமை மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

சாலையில் கிடந்த பச்சிளங்குழந்தை பத்திரமாக மீட்பு

அங்கு, மருத்துவர் கார்த்திகேயன் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அங்கு வந்த பிரான்மலை அரசு சுகாதார நிலைய குழந்தைகள் நல மருத்துவர் சுருதி, குழந்தைக்கு சிகிச்சை அளித்தார்.

தொப்புள் கொடியுடன் கழுத்து மற்றும் கையை அறுத்து குழந்தையை வீசிச் சென்றது தாயா அல்லது யார் என்பது குறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.