தமிழ்நாடு

பத்திரிகையாளர்கள் பணம் பெற்றதாக வெளியான பட்டியல் தவறானது: மன்னிப்பு கோரியது அதிமுக ஐடி பிரிவு

பத்திரிகையாளர்கள் பணம் பெற்றதாக வெளியான பட்டியல் தவறானது: மன்னிப்பு கோரியது அதிமுக ஐடி பிரிவு

Rasus

சேகர்ரெட்டியிடம் இருந்து பத்திரிகையாளர்கள் சிலர் பணம் பெற்றதாக வெளியிடப்பட்ட பட்டியல் தவறானது எனவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

சேகர் ரெட்டியிடம் இருந்து பணம் பெற்றதாக மூத்த பத்திரிகையாளர்கள் சிலரது பெயர் அடங்கிய பட்டியல், அதிமுக தொழில்நுட்பப் பிரிவு மூலம் வெளியிடப்பட்டிருந்தது. அதுதொடர்பாக, தொழில்நுட்பப் பிரிவின் செயலாளர் பிரசாந்திடம் தொலைபேசி மூலம் பேசிய ஆங்கில தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளர் ஷபீர் அகமது, பட்டியலின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது பத்திரிகையாளர்களின் பெயர் கொண்ட பட்டியல் முழுக்க தவறானது எனவும், அதை சரிபார்க்காமல் அதிமுக தொழில்நுட்பப் பிரிவு இணையதளத்தில் பகிர்ந்துவிட்டதாகவும் பிரசாந்த் கூறினார். மேலும், தனது இந்த செயலுக்கு அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளார்.