நடிகர்கள் மாரிமுத்து, வடிவேலு புதிய தலைமுறை
தமிழ்நாடு

"அந்த காமெடியை உருவாக்கியதே அவர்தான்.." - சோகத்துடன் சொன்ன வடிவேலு!

”நடிகர் மாரிமுத்து மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

Prakash J

மதுரை விமான நிலையத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ”மாரிமுத்து இறப்பு குறித்து நான் முதலில் நம்பவில்லை. எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. நெருங்கிப் பழகிய நபர்; அவர் படம்தான் ’கண்ணும் கண்ணும்’. அதில், ’அடித்துக்கூட கேட்பார்கள் சொல்லாதீர்கள்; போலீஸ் வரும்; ஏதும் சொல்லாத. அடிச்சுக்கூட கேப்பாங்க, சொல்லாத’ என்ற காமெடியை அவர்தான் உருவாக்கினார்.

அவருடைய மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் குடும்பத்திற்கு மன தைரியம் வர வேண்டும். ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.