தமிழ்நாடு

விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்

webteam

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்‌காக அழைத்துச் செல்லப்பட்ட ஏழு‌மலை என்பவர் உயிரிழந்தார். அதைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி அடுத்த மலையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் அப்‌பகுதியில் சாராய வியாபாரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இவர் மீது பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் களம்பூர் காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றிருந்த போது ஏழுமலை உயிரிழந்தார். தகவலறிந்த ஏழுமலையின் உறவினர்கள் மலையாம்பட்டு கிராம கூட்ரோடு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர். இதனால் அப்பகுதியில் ஏ.டி.எஸ்.பி தங்கராஜ் தலைமையில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். காவல் துறையினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை ஏற்காத ஏழுமலையின் உறவினர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.