தமிழ்நாடு

‘ஓ.பி.எஸ். புறக்கணிப்பு’: அணி மாறுகிறார் ஆறுகுட்டி எம்.எல்.ஏ.!

webteam

அரசியலில் திடீர் திருப்பமாக, ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த ஆறுகுட்டி எம்.எல்.ஏ. அந்த அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த அவர், தன்னை ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்துவிட்டதாக குற்றம்சாட்டினார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஓ.பி.எஸ். தன்னை அழைக்காமல் வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டதாகவும், கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வான ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஓ.பி.எஸ். அணியிலிருந்து விலகிவிட்டதாகக் கூறிய அவர், எடப்பாடி பழனிசாமி அணியில் இணைவது பற்றி ஆலோசித்து முடிவெடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதிமுக அணிகள் இரண்டாகப் பிரிந்தபோது ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்தவர், ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது. ஓ.பி.எஸ். அணியிலிருந்து ஆறுக்குட்டி விலகியதால் அந்த அணியின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 11-ஆகக் குறைந்துள்ளது.