தமிழ்நாடு

குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது

webteam

புதுக்கோட்டையில் சிறுவன் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்ததில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் ரகுபதி(22). இவர் புதுக்கோட்டையில் கேபிள் டிவி பழுதுபார்க்கும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் புதுக்கோட்டை திலகர் திடல் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கேபிள் டிவி பழுது பார்க்க சென்றுள்ளார். அப்போது அந்த குடியிருப்பின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை ஆசை வார்த்தை கூறி மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

அப்போது, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த சிலர் அதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த குழந்தைகளை மீட்டனர். அப்போது ரகுபதியை பிடித்து அடித்து புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  அங்கு காவல் ஆய்வாளரின் தீவிர விசாரணையை அடுத்து  ரகுபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.