தமிழ்நாடு

கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் சடலமாக கண்டெடுப்பு

webteam

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் சடலமாக கண்டெடுப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை அருகே பரளச்சி ராணிசேதுபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சத்தியபாமா, விவசாயம் செய்து வருகிறார். தினமும் இவர் காலை தனக்கு சொந்தமான நிலத்திற்கு விவசாய பணிக்காக சென்றுவிட்டு மாலை வீடு திரும்புவது வழக்கம். இந்நிலை நேற்று ஊரின் வடக்குப்பகுதியிலுள்ள தனக்கு சொந்தமான விவசாய காட்டில் பாசிப்பயிறு பறிக்க சென்றுள்ளார். 

ஆனால் நள்ளிரவு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் காட்டுப்பகுதிக்குப் போய் சத்தியபாமாவை தேடி உள்ளனனர். மேலும் அதனை அடுத்து பரளச்சி காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். ஊர்மக்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் இரவு முழுவதும் காட்டுப்பகுதியில் சத்தியபாமாவை தேடி உள்ளனர்.

ஆனால், இவர் இரவு முழுவதும் தேடியும் சத்தியபாமா பற்றி ஒரு தகவலும் கிடைக்காத நிலையில் இன்று காலை மக்காச்சோளகாட்டில் கழுத்தறுத்த நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக அவர் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும் சத்தியபாமாவை கொலை செய்த மர்மநபர்கள்  கொலையை மறைப்பதற்காக உடலின் மீது சோளக்கதிர்களை வைத்து மறைத்து விட்டு சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பரளச்சி காவல்துறையினர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவசாய பணிக்கு சென்ற பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.