தமிழ்நாடு

இலங்கை கடற்படையால் 8 தமிழக மீனவர்கள் கைது

webteam

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடியைச் சேர்ந்த 8 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த மரிய பாக்கியத்திற்குச் சொந்தமான நாட்டுப்படகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 8 பேர் தங்கு கடலில் மீன்பிடிக்கச் சென்றிருக்கின்றனர். திரேஸ்புரம் கடற்கரையிலிருந்து 70 கடல் மைல் தூரத்தில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 8 நாட்டுப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.