தமிழ்நாடு

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: அரசு உத்தரவு

Veeramani

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்று (07-08-2021) தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவின்படி 

  1. தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் எஸ்.செந்தாமரை, நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
  2. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் மகேஸ்வரி ரவிக்குமார், பொதுப்பணித்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
  3. தமிழக வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராகப் பதவி வகிக்கும் எம்.அருணா, கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
  4. தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராகப் பதவி வகிக்கும் ஷரவன் குமார் ஜதாவத், வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்படுகிறார். இதன் மூலம், அவரை பொது (தேர்தல்) துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
  5. பள்ளிக் கல்வித்துறையின் துணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் ஜே.ஆனி மேரி ஸ்வர்ணா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  6. உள்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் ஏ.ஜான் லூயிஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  7. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் எம்.லஷ்மி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்படுகிறார்