தமிழ்நாடு

வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலியை கல்லால் தாக்கிய இளைஞர்கள்

webteam

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளை புலியை கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்திய 6 இளைஞர்கள் எச்சரிக்கைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 

பீமா என்ற 6 வயது வெள்ளை புலியை, இளைஞர்கள் சிலர் கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக பார்வையாளர்கள் பூங்கா நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து விஜயன், பிரசாந்த், சந்தோஷ், அருள், சூர்யா, சரத் ஆகிய 6 இளஞர்களை பூங்கா வனச்சரகர் கோபக்குமார் பிடித்து விசாரணை நடத்தினார். 

அவர்களை சட்டப்படி தண்டிக்காமல், சம்பந்தப்பட்ட புலியை தத்தெடுக்கும் வகையில் 6 பேரிடமும் தலா 500 ரூபாயை வசூலித்துவிட்டு, எச்சரித்து அனுப்பினார்.