Accused with forest dept pt desk
தமிழ்நாடு

கோவை: யானை தந்தத்தை விற்க முயற்சி - காரில் விரட்டிச் சென்று 6 பேரை கைது செய்த வனத்துறையினர்

webteam

செய்தியாளர்: பிரவீண்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழியாக கோவைக்கு யானை தந்தம் கடத்தப்படுவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையில் மதுக்கரை வனச்சரகர் அருண்குமார், கோயமுத்தூர் வனச்சரகர் திருமுருகன் ஆகியோர் அடங்கிய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு யானை தந்தம் கடத்தி வரும் வாகனங்களை கண்காணித்து வந்தனர்.

Accused

அப்போது துடியலூர் பகுதியில் நின்றிருந்த குழுவினர் சந்தேகப்படும்படியாக வந்த பொலீரோ ஜீப்பை மடக்க முயன்றனர். அப்போது வனத்துறையினர் வந்த காரை இடித்து விட்டு பன்னிமடை வழியாக தப்பிச் செல்ல முயன்றனர். இதனை தொடர்ந்து மற்ற குழுக்களில் இருந்தவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு பொலீரோ வாகனத்தை வனத்துறையினர் சேசிங் செய்தனர்.

தொடர்ந்து அவர்கள் கூறிய இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அங்கு யானை தந்தம் ஏதும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த பிதர்காடு பழங்குடியினர் சங்கத்தின் செயலாளராக உள்ள சங்கீதா தலைமையில் நீலகிரியில் இருந்து யானை தந்தத்தை கடத்தி வந்ததும், இதனை கோவையில் உள்ள ஒருவருக்கு விற்க முடிவு செய்ததும் தெரியவந்தது.

Arrested

இதனைத் தொடர்ந்து யானை தந்தம் கடத்தி வந்த கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த சர்வேஷ், கூடலூர் பிதர்காடு பகுதியை சேர்ந்த சங்கீதா,கோவை இடையர்பாளையம் பகுதி சேர்ந்த விக்னேஷ், கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த லோகநாதன், நாகமாநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த அருள் ஆரோக்கியம், பாலமுருகன் ஆகியோரை கைது செய்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.