தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,647 பேருக்கு கொரோனா

EllusamyKarthik

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,647 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட அறிக்கையை தினந்தோறும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் சுமார் 5,647 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,75,017 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சுமார் 94,037 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதோடு இன்று மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் சுமார் 5,612 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமக 9,233 பேர் உயிரிழந்துள்ளனர்.